என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே மது விற்ற 3 பேர் கைது
    X

    அறந்தாங்கி அருகே மது விற்ற 3 பேர் கைது

    அறந்தாங்கி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மது விலக்கு அமலாக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று முக்கிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அறந்தாங்கி கடையத்துப்பட்டி அருகே உள்ள கடை வீதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த செல்லையா மற்றும் அதே பகுதியில் பெட்டி கடையில் வைத்து மது விற்பனை செய்த பரமசிவன் ஆகியோர் கைது செய்யப்ட்டனர்.

    அதுபோன்று அறந்தாங்கி கடை வீதி அருகே பெட்டி கடையில் மறைத்து வைத்து  மது விற்பனை செய்த சிவக்குமாரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பிடிப்பட்ட இந்த 3 பேர்களிடமிருந்து மொத்தம் 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×