என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் தொடர்ந்து அடைமழை
    X

    ஈரோட்டில் தொடர்ந்து அடைமழை

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து அடைமழை பெய்து வருகின்றது.

    ஈரோடு,

    தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் ஆதிக்கம் செலுத்தியது. மாலை 3 மணிக்கு மேல் திடீரென மேகக் கூட்டங்கள் சூழ்ந்தது.

    இதையொட்டி ஈரோடு, மொடக்குறிச்சி, பவானி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து இரவிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    ஈரோட்டில் நெற்று இரவு பெய்த மழை இன்று காலையும் பெய்தது. வானம் மேகக் கூட்டங்களால் சூழ்ந்து இருள் போல் காணப்பட்டது.

    அதிகாலையில் இருந்தே மழை தூறிக் கொண்டே இருந்தது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழை வலுத்து பெய்தது.

    இதே போல் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான பாரியூர், கொளப்பலூர், சிறுவலூர், நம்பியூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளிலும் இன்று காலையில் இருந்தே மழை தூறிக் கொண்டே இருந்தது.

    இதே போல் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி, மற்றும் பண்ணாரி, ஆசனூர், தளவாடி ஆகிய வனப்பகுதிகளிலும் மழை அடைமழை போல் பெய்தது.

    மாவட்டத்தில் சென்னிமழை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை கொட்டியது.

    சென்னிமலையில் இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    பெருந்துறை மற்றும் விஜயமங்கலம், ஈங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலையில் பொதுமக்கள் வெளியே போக வைக்காத வகையில் அடைமழை சிறை வைத்தது.

    மேலும் கொடுமுடி, அந்தியூர், ஆப்பக்கூடல், டி.என்.பாளையம் உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் அடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    Next Story
    ×