என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடலூரில் என்.எல்.சி. தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை
    X

    வடலூரில் என்.எல்.சி. தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை

    வடலூரில் என்.எல்.சி. தொழிலாளியை கள்ளக்காதலி கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள கொம்பாடி குப்பத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி அஞ்சலை (வயது 47).

    திரிசங்குடன் பண்ருட்டியை அடுத்த திருத்தலையூரைச் சேர்ந்த குணசேகரன் (42) என்பவரும் வேலைபார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரிசங்கு இறந்து விட்டார்.

    அதன்பின்னர் திரிசங்கு குடும்பத்துக்கு குணசேகரன் வேண்டிய உதவிகளை செய்து வந்தார். அஞ்சலை வீட்டுக்கு குணசேகரன் அடிக்கடி வந்து சென்றதால் அஞ்சலை-குணசேகரன் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வடலூர் நெய்வேலி சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    அஞ்சலையின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மகள்கள் மற்றும் மகன் யாரும் அவரது வீட்டுக்கு வருவதில்லை. இது கள்ளக்காதல் ஜோடிக்கு மிகவும் வசதியாக அமைந்தது.

    இந்தநிலையில் குணசேகரனின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவர் சரியாக அஞ்சலை வீட்டுக்கு வருவதில்லை. செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. குணசேகரனின் மாற்றத்துக்கு காரணம் என்ன என்று அஞ்சலை அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தான் குணசேகரனுக்கும், வேறுஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதும், அதன்காரணமாகவே அவர் தனது வீட்டுக்கு வராமல் இருப்பதையும் அறிந்தார்.

    இது குறித்து குணசேகரனிடம் அஞ்சலை கேட்ட போது அவர் சரியாக பதில் ஏதும் கூறவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குணசேகரன் நேற்று இரவு அஞ்சலையின் வீட்டுக்கு வந்தார். அப்போது, நீ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறாயா? உண்மையை சொல் என்று அஞ்சலை கேட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அஞ்சலை மிகவும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இன்று அதிகாலை ஆவேசமாக எழுந்த அஞ்சலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர் வடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அஞ்சலையை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குணசேகரன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து அதன் பின்னர் அஞ்சலையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×