என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியவர் தவறி விழுந்து பலி
    X

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியவர் தவறி விழுந்து பலி

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியவர் தவறி விழுந்து பலியானார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் திருவேடத்தூர் ஜம்முடாண்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45).

    ஈரோடு வந்த இவர் சேலம் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையம் வந்தார். 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சேலம் செல்லும் ரெயில் 3-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது. அந்த ரெயில் புறப்பட்டது.

    இதை கண்ட ராஜேஷ் ஓடி சென்று ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இடறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×