என் மலர்
செய்திகள்

கவர்னர் கிரண்பேடிக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: நாராயணசாமி பேட்டி
கவர்னர் கிரண்பேடிக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சென்னையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்
ஆலந்தூர்:
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்காகவும் நான் மற்றும் 5 அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து நிதி கேட்க உள்ளோம்.
யோகா நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. யோகா என்பது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது. நல்லதை யார் செய்தாலும் வரவேற்போம்.
மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸ்தான் தொழில் முறையில் அன்னிய முதலீட்டை ஏற்கனவே கொண்டு வந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும்போது முதலில் 47 சதவீதமும், பின்பு 60 சதவீதமும் கொண்டு வந்தோம். அப்போது ப.ஜனதா கடுமையாக எதிர்த்தது. இப்போது 100 சதவீதத்தை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறது. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை பா.ஜனதா செயல்படுத்துகிறது.
இதைபோல அணுசக்தி ஒப்பந்தங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் காங்கிரஸ் செயல்படுத்தியது. அப்போது பா.ஜனதா எதிர்த்தது. இப்போது அணுசக்திக்கு வெளிநாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதுவை கவர்னருக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கவர்னரும், நாங்களும் இணைந்து செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநில வளர்ச்சிக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்காகவும் நான் மற்றும் 5 அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து நிதி கேட்க உள்ளோம்.
யோகா நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. யோகா என்பது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது. நல்லதை யார் செய்தாலும் வரவேற்போம்.
மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸ்தான் தொழில் முறையில் அன்னிய முதலீட்டை ஏற்கனவே கொண்டு வந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருக்கும்போது முதலில் 47 சதவீதமும், பின்பு 60 சதவீதமும் கொண்டு வந்தோம். அப்போது ப.ஜனதா கடுமையாக எதிர்த்தது. இப்போது 100 சதவீதத்தை அனுமதிப்போம் என்று சொல்லி இருக்கிறது. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்தை பா.ஜனதா செயல்படுத்துகிறது.
இதைபோல அணுசக்தி ஒப்பந்தங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் காங்கிரஸ் செயல்படுத்தியது. அப்போது பா.ஜனதா எதிர்த்தது. இப்போது அணுசக்திக்கு வெளிநாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
புதுவை கவர்னருக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கவர்னரும், நாங்களும் இணைந்து செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






