என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பாக்கம் அருகே இளம் பெண் கடத்தல்
    X

    கல்பாக்கம் அருகே இளம் பெண் கடத்தல்

    கல்பாக்கம் அருகே இளம் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் சீக்கினாங் குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மகள் லாவண்யா (வயது 20).

    கடந்த 16-ந்தேதி கல்பாக்கத்தில் உள்ள தோழியை பார்க்க சென்ற லாவண்யா பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே லாவண்யாவின் தந்தை லட்சுமணன் கூவத்தூர் போலீசில் கடத்தல் புகார் கொடுத்தார்.

    அதில் பனையூர் குப்பத்தை சேர்ந்த வாலிபர் லாவண்யாவை கடத்தி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×