என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே நர்சிங் மாணவி மாயம்
    X

    சங்கரன்கோவில் அருகே நர்சிங் மாணவி மாயம்

    சங்கரன்கோவில் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் தேடி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் சுமித்ரா (வயது 19). இவர் முறம்பில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் வேல்முருகன் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவி சுமித்ராவை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×