search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் விபத்து போலீஸ்காரரின் பைக் மோதி முதியவர் சாவு
    X

    ராமநாதபுரத்தில் விபத்து போலீஸ்காரரின் பைக் மோதி முதியவர் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரத்தில் சைக்கிள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிவந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் நேரு நகரில் வசித்து வந்தவர் கருப்பையா மகன் கிருஷ்ணன் (வயது69). இவர் மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில்  கிருஷ்ணன் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக, கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×