என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம்: கலெக்டர் தகவல்
    X

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம்: கலெக்டர் தகவல்

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர 30–ந் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்,

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மைப் பள்ளிகள் தவிர்த்து) 2016–17–ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுநிலை வகுப்புகளில் கட்டணமின்றி சேர்க்கை விண்ணப்பங்கள் பெற இந்த மாதம் 30–ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் சுயநிதி பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் போன்ற இடங்களில் கிடைக்கும்.

    இந்த சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுபவர்கள் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்க்கை கோர முடியும். சேர்க்கை கோருபவரின் முகவரியானது பள்ளி இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ–க்குள் இருக்க வேண்டும்.

    6–ம் வகுப்பு சேர்க்கைக்கு பள்ளியானது விண்ணப்பதாரரின் இருப்பிடத்தில் இருந்து 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பள்ளியிலோ, அல்லது மேலே குறிப்பிட்ட அலுவலகங்களிலோ வரும் 30–ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×