என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை தொகுதிக்குட்பட்ட சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்குகிறார்
    X

    விராலிமலை தொகுதிக்குட்பட்ட சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்குகிறார்

    விராலிமலை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்குகிறார்.

    விராலிமலை:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட அளவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், விராலிமலை சட்டமன்ற பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நாளை (19ம் தேதி) காலை 10 மணியளவில் இலுப்பூர் ஏ.ஆர்.ஆர். திருமண மஹாலில் நடைபெறுகிறது.

    இதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசுகிறார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்குகிறார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அன்னவாசல் ஒன்றிய முன்னாள் சேர்மனும், கூட்டுறவு ஒன்றியங்களின் மாவட்டத்தலைவருமான சின்னதம்பி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சத்யா, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சூசை, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகின்றனர்

    Next Story
    ×