என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் புதிய பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் முக்கிய வீதிகளில் வைக்கப்படுகிறது
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முழு சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படுகிறது.
நகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வைகை ஆற்றிலும் மருத்துவ கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படாத வகையில் வைகை ஆறும் கண்காணிப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் கோழிகழிவுகளை வீசும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர நாள்தோறும் தினமும் காலையில் அனைத்து தெருக்களிலும் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து வாங்கும் பணியும் நடந்து வருகிறது.
தற்போது திருமண விழா மற்றும் திருவிழா காலங்களில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளை தடுக்க பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தயார் நிலையில் உள்ளது. புதிய உறுதியான இந்த குப்பை தொட்டிகள் மானாமதுரை பஸ் நிலையம், மருத்துவமனை, வாரச்சந்தை, வைகை ஆற்று கரை பகுதி, மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் வைக்கப்பட உள்ளன என மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் ஆகியோர் தெரிவித்தனர்.






