என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவல்பூந்துறை பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடம்: கலெக்டர் ஆய்வு
    X

    அவல்பூந்துறை பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடம்: கலெக்டர் ஆய்வு

    மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட அவல்பூந்துறை பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை பேரூராட்சி செயல்பட்டு வரும் பழைய கட்டிடம் போதிய வசதிகளின்றி இருந்து வந்தது. அதனை தொடர்ந்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அவல்பூந்துறை சந்தை வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கி, விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் ஆர்.பி. கதிர்வேல், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி. சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ச.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, பேரூராட்சி துணை தலைவர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் செந்தில்குமார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×