என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலி
மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மேலநாங்கூர் பாலசுப்பிரமணியன் மகன் செல்வம்(28). அதே ஊரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிவண்ணன்(27). இவர்கள் ராகவன் மகன் ரகுவரன் 3பேரும் மயிலாடுதுறை நோக்கி தரங்கை சாலையில் மன்னம்பந்தல் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
தருமபுரம் ஆர்ச் பகுதியில் முன்னே சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே கார் வந்ததால் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவண்ணன் இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் படுகாயம் அடைந்த இருவர் மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Next Story






