என் மலர்
செய்திகள்

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு: ஆந்திர மந்திரி அறிவிப்பு
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (29). இவரது தந்தை குப்புசாமி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் மயிலாத்தாள். தங்கை கவிதா. திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சசிகுமார் சத்தியமங்கலத்தில் பள்ளி படிப்பை முடித்து சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பி.ஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்தார். போலீஸ் அதிகாரி ஆகும் ஆர்வத்தில ஐ.பி.எஸ் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். 29 வயதிலேயே ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.
தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேறு பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 6 மாதத்துக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் ஆந்திர அரசு ஒதுக்கி இருந்த அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.
சசிகுமார் நேற்று அதிகாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் பதட்டத்துடன் ஓடிச்சென்று பார்த்தனர்.
அங்கு படுக்கை அறையில் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. ஐ.பி.எஸ் அதிகாரியாக சசிகுமார் மிகவும் துடிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்து உள்ளார். இதற்கு முறை கர்னூல் மாவட்டத்தில் ஆலகட்டா பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் கொடி கட்டி பறந்த செம்மரக் கடத்தல் தாதாக்களை கைது செய்து உள்ளார்.
விசாகபட்டினத்தில் கஞ்சா கடத்தலையும் துணிச்சலுடன் தடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் கூட பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார். சாகுபடி செய்துள்ள கஞ்சா செடிகளை அழித்துள்ளார்.
இந்த நிலையில்தான் சசிகுமார் தனது அறையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இவர் மீது ஆத்திரத்தில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பலோ அல்லது கஞ்சா கடத்தல் பேர்வழிகளோ அவரை சுட்டு கொலை செய்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
துணிச்சலான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்ததால் உயர் அதிகாரிகள் பல்வேறு வழியில் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் பேசப்பட்டு வருகிறது.
சசிகுமார் இறந்த செய்தி கேட்டதும் அவரது பெற்றோர் மற்றும் சென்னையில் உள்ள அவரது தங்கை கவிதா, அவரது கணவர் பத்மநாபன் ஆகியோர் விசாகப்பட்டினத்துக்கு விரைந்தனர்.
சசிகுமாரின் உடல் விசாகப்பட்டினத்தில் உள்ள கே.ஜி.எச். ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது பெற்றோர் அங்கு வந்து சேர்ந்தனர். மகனின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் பெற்றோர் மயங்கி விழுந்தனர்.
எம்.எல்.ஏ. ஈஸ்வரி, கலெக்டர் யுவராஜ், டி.ஐ.சி. ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சசிகுமாரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் சசிகுமாரின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பின்னர் இன்று மாலையில் அவரது உடல் சொந்த ஊரான சத்தியமங்கலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
சசிகுமார் மரணம் தொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தேவ் சர்மா சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அவரது தலையில் புகுந்தது 9 எம்.எம். வகை தோட்டா ஆகும்.
இந்த தகவல் ஆந்திர மாநில உள்துறை மந்திரி சினராஜப்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் அதிகாரி சசிகுமாரின் உறவினர்களுடன் பேசினார். பின்னர் சசிகுமார் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சசிகுமார் பிணமாக கிடந்த அறையில் இருந்த மேஜையில் கடிதம் ஒன்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது உறவினர்கள் முன்னிலையில் அந்த கடிதத்தை பிரித்து பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமாருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமண பத்திரிகை தயார் செய்ய ஊருக்கு செல்வதற்காக 3 நாள் விடுமுறை கேட்டு சசிகுமார் உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சசிகுமார் மரணம் அடைந்தது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (29). இவரது தந்தை குப்புசாமி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தாயார் மயிலாத்தாள். தங்கை கவிதா. திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சசிகுமார் சத்தியமங்கலத்தில் பள்ளி படிப்பை முடித்து சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பி.ஈ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்தார். போலீஸ் அதிகாரி ஆகும் ஆர்வத்தில ஐ.பி.எஸ் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். 29 வயதிலேயே ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார்.
தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேறு பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 6 மாதத்துக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் ஆந்திர அரசு ஒதுக்கி இருந்த அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.
சசிகுமார் நேற்று அதிகாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் பதட்டத்துடன் ஓடிச்சென்று பார்த்தனர்.
அங்கு படுக்கை அறையில் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. ஐ.பி.எஸ் அதிகாரியாக சசிகுமார் மிகவும் துடிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்து உள்ளார். இதற்கு முறை கர்னூல் மாவட்டத்தில் ஆலகட்டா பகுதி உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் கொடி கட்டி பறந்த செம்மரக் கடத்தல் தாதாக்களை கைது செய்து உள்ளார்.
விசாகபட்டினத்தில் கஞ்சா கடத்தலையும் துணிச்சலுடன் தடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் கூட பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார். சாகுபடி செய்துள்ள கஞ்சா செடிகளை அழித்துள்ளார்.
இந்த நிலையில்தான் சசிகுமார் தனது அறையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இவர் மீது ஆத்திரத்தில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பலோ அல்லது கஞ்சா கடத்தல் பேர்வழிகளோ அவரை சுட்டு கொலை செய்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
துணிச்சலான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்ததால் உயர் அதிகாரிகள் பல்வேறு வழியில் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் பேசப்பட்டு வருகிறது.
சசிகுமார் இறந்த செய்தி கேட்டதும் அவரது பெற்றோர் மற்றும் சென்னையில் உள்ள அவரது தங்கை கவிதா, அவரது கணவர் பத்மநாபன் ஆகியோர் விசாகப்பட்டினத்துக்கு விரைந்தனர்.
சசிகுமாரின் உடல் விசாகப்பட்டினத்தில் உள்ள கே.ஜி.எச். ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அவரது பெற்றோர் அங்கு வந்து சேர்ந்தனர். மகனின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் பெற்றோர் மயங்கி விழுந்தனர்.
எம்.எல்.ஏ. ஈஸ்வரி, கலெக்டர் யுவராஜ், டி.ஐ.சி. ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சசிகுமாரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் சசிகுமாரின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பின்னர் இன்று மாலையில் அவரது உடல் சொந்த ஊரான சத்தியமங்கலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
சசிகுமார் மரணம் தொடர்பாக விசாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தேவ் சர்மா சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அவரது தலையில் புகுந்தது 9 எம்.எம். வகை தோட்டா ஆகும்.
இந்த தகவல் ஆந்திர மாநில உள்துறை மந்திரி சினராஜப்பாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீஸ் அதிகாரி சசிகுமாரின் உறவினர்களுடன் பேசினார். பின்னர் சசிகுமார் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சசிகுமார் பிணமாக கிடந்த அறையில் இருந்த மேஜையில் கடிதம் ஒன்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது உறவினர்கள் முன்னிலையில் அந்த கடிதத்தை பிரித்து பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமாருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக திருமண பத்திரிகை தயார் செய்ய ஊருக்கு செல்வதற்காக 3 நாள் விடுமுறை கேட்டு சசிகுமார் உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார்.
ஐ.பி.எஸ் அதிகாரி சசிகுமார் மரணம் அடைந்தது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
Next Story






