என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறில் தூக்கி வீசப்பட்ட 1½ மாத குழந்தை: தந்தைக்கு போலீசார் வலைவீச்சு
வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறில் 1½ மாத குழந்தையை தூக்கி வீசிய தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் காவல் சரகம் செண்பகராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சதீஷ்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீதாமணி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ சக்தீஸ்வரராம் என்ற 1½ மாதம் ஆண் குழந்தை உள்ளது.
கணவன்–மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது 1½ மாத குழந்தையை தூக்கி வீசினாராம். இதில் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷை தேடி வருகின்றார்.
வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் காவல் சரகம் செண்பகராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சதீஷ்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீதாமணி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ சக்தீஸ்வரராம் என்ற 1½ மாதம் ஆண் குழந்தை உள்ளது.
கணவன்–மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது 1½ மாத குழந்தையை தூக்கி வீசினாராம். இதில் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷை தேடி வருகின்றார்.
Next Story






