என் மலர்
செய்திகள்

சென்னிமலை அருகே ஜீப்பை ஓட்டி வந்தவர் திடீர் மாரடைப்பால் சாவு
சென்னிமலை:
திண்டுக்கல் மாவட்டம் அவனிப்பட்டியில் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 40). இவர் கரூரில் உள்ள டெக்ஸ் டைல்ஸ் நிறுவனத்தில் டிராக்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கரூரில் இருந்து உற்பத்தி செய்த துணிகளை வாங்கி செல்ல காங்கேயம் சென்னிமலை பெருந்துறை வழியாக குன்னத்தூர் செல்வதற்காக சென்றார்.
இவர் மட்டும் தனியாக ஜீப்பை ஓட்டி வந்துள்ளார். சென்னிமலை டவுன் காங்கேயம் ரோடு எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே வந்த போது தீடீர் என உடல் நிலை சரியில்லை என கூறி ஜீப்பினை நிறுத்தி விட்டு கம்பெனிக்கு போன் செய்து உடல் நிலை சரியில்லை ஒரு மணி நேரம் படுத்து இருந்து விட்டு செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஜீப்பில் படுத்தார். பிறகு அப்படியே மயங்கி விட்டார்.
இதை தெரிந்து அக்கம் பக்கத்தவர்கள் பார்த்து சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அதே ஜீப்பில் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதை அடுத்து அவரிடம் இருந்த போன் மூலம் தகவல் சொல்லி சென்னிமலையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு சென்றுள்ளனர்.
பாதி தூரம் சென்ற பிறகு சில உறவினர்கள் சேர்ந்து கொண்டு சாவில் சந்தேகம் உள்ளது போலீஸ் புகார் கொடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி இறந்தவர் உடலை மீண்டும் சென்னிமலைக்கு திருப்பி கொண்டு செல்ல வேண்டும் என கூறி உள்ளனர்.
இதை அடுத்து ஆம் புலன்ஸ் டிரைவர் சென்னிமலை கொண்டு வந்து விட்டார். உடல் பல மணி நேரம் சென்னிமலை போலீஸ் நிலையம் முன்பு ஆம்புலன்சிலேயே இருந்தது.
இரவு 8 மணிக்கு உறவினர்கள் சென்னிமலை போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் வெங்காடாசல்திடம் பேசினர். அப்போது எங்களுக்கு சாவில் சந்தேகம் இல்லை இன்சூரன்ஸ் உள்ளது அதனால் முறைப்படி உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்று கொள்வதாக தெரிவித்தனர்.
அதன் பின்பு மனைவி லட்சுமி கொடுத்த புகாரினை பதிவு செய்து பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.இறந்த ஆறுமுகத்திற்கு லோகநாத் (13), காளீஸ்வரன் (12) ஆகிய 2 மகன் உள்ளனர்.






