என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி–கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 87 பேர் அதிரடி கைது
    X

    பள்ளி–கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 87 பேர் அதிரடி கைது

    பள்ளி–கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி–கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பள்ளி– கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே புகையிலை, பான்மசாலா, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையொட்டி 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல பெருந்துறை டி.எஸ்.பி சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 39 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக பெருந்துறையில் 5 வழக்குகளும், வெள்ளோட்டில் 1 வழக்கும், சென்னிமலையில் 6 வழக்குகளும், காஞ்சிக்கோவிலில் 5 வழக்குகளும், அரச்சலூரில் 4 வழக்குகளும், கொடுமுடியில் 10 வழக்குகளும், சிவகிரியில் 6 வழக்குகளும், மலையம்பாளையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×