என் மலர்
செய்திகள்

சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி
சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்
சென்னிமலை :
சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன்கலைவாணி (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பிறகு சமாதானம் அடைந்து மோகன்ராஜ் - கலைவாணியின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இவர்களின் திருமணம் இன்று (வியாழக்கிழமை) நடக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் உறவினர்களும் செய்து வந்தனர்.
இதனால் காதலர்கள் இருவரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். தங்களது காதல் வெற்றி பெற்று திருமணம் நடக்கப்போவதை அறிந்து அவர்கள் பல்வேறு கனவுகளுடன் மிதந்தனர்.
இந்த நிலையில் மோகன் ராஜும், கலைவாணியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்தவழியாக வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த மோகன்ராஜுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னால் உட்கார்ந்து இருந்த கலைவாணியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் விபத்தில் பலியான சம்பவமும், மணமகள் படுகாயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சம்பவமும் இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன்கலைவாணி (18) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பிறகு சமாதானம் அடைந்து மோகன்ராஜ் - கலைவாணியின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இவர்களின் திருமணம் இன்று (வியாழக்கிழமை) நடக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் உறவினர்களும் செய்து வந்தனர்.
இதனால் காதலர்கள் இருவரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். தங்களது காதல் வெற்றி பெற்று திருமணம் நடக்கப்போவதை அறிந்து அவர்கள் பல்வேறு கனவுகளுடன் மிதந்தனர்.
இந்த நிலையில் மோகன் ராஜும், கலைவாணியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். சென்னிமலை அருகே உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்தவழியாக வந்த ஒரு லாரியும் மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த மோகன்ராஜுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னால் உட்கார்ந்து இருந்த கலைவாணியும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் விபத்தில் பலியான சம்பவமும், மணமகள் படுகாயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சம்பவமும் இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






