என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதி அருகே நாம் தமிழர் கட்சி நன்றி அறிவிப்பு கூட்டம்
    X

    பொன்னமராவதி அருகே நாம் தமிழர் கட்சி நன்றி அறிவிப்பு கூட்டம்

    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகேஷ் தலைமை வகித்தார். திருமயம் சட்டப் பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கனகரெத்தினம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருப்பூர் சுடலை, புதூர் சிவராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் நல்லூர் தார்சாலை சீரமைக்கப்படவேண்டும். கொள்ளுப்பட்டு சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும். வார்ப்பட்டு துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    நிர்வாகிகள் நாகராஜன், சுரேஷ், ரவீந்திரன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×