என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் 16–ந்தேதி கூகூர் சண்முகம் இல்ல திருமண விழா: ஜி.கே.வாசன் நடத்தி வைக்கிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கூகூர் மிராஸ் கே.சண்முகம்– செல்வி ஆகியோரின் மகள் கே.எஸ்.சண்முகப்பிரியாவிற்கும், திருச்சி மாவட்டம் மேலக்கல்கண்டார்கோட்டை கணேசன்–கலைவாணி ஆகியோரின் மகன் சிவக்கண்ணுவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களது திருமணம் வருகிற 16–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதுக்கோட்டை லேணா மண்டபத்தில் நடைபெறுகிறது.
விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
விழாவில் மாநில நிர்வாகிகள் லேணா சரவணன், ஆர்.எல்.தமிழரசன், பூமா.ராமசாமி, ஏ.கே.ராமன், ஆனந்த் மாணிக்கம், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பெரியண்ணன் அரசு எம். எல்.ஏ., ரகுபதி எம்.எல்.ஏ., சி.வ. மெய்யநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்டத் தலைவர் கூகூர்.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






