என் மலர்
செய்திகள்

பணியின்போது இறந்த கிராம நிர்வாக அலுவலர்களின் மகன்களுக்கு பணி நியமன ஆணை
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 20 மனுக்களும், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 244 என மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் குத்தாலம் வட்டம் மாதிரி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் பணியின் போது மரண மடைந்ததால் அவரின் மகன் தென்னரசுக்கும், தரங்கம்பாடி வட்டம் மாணிக் கபங்கு கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் பணியின் போது இறந்ததால் அவரின் மகன் உதயகுமார் ஆகியோருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.






