என் மலர்
செய்திகள்

பவானிசாகர் அணை 40 அடியை தொட்டது
பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை 40 அடியை தொட்டு 40.15 அடியாக இருந்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதால பாதாளம் வரை சென்றது. 30 அடிக்கும் கீழே சென்றதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும் கவலையுடன் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டியும் மேலும் மின்சாரம் தயாரிக்க அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டியும் சிறுக.. சிறுக நீர்மட்டம் உயர்ந்தது.
இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணை 40 அடியை தொட்டு 40.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 420 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீரும், வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதால பாதாளம் வரை சென்றது. 30 அடிக்கும் கீழே சென்றதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும் கவலையுடன் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டியும் மேலும் மின்சாரம் தயாரிக்க அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டியும் சிறுக.. சிறுக நீர்மட்டம் உயர்ந்தது.
இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணை 40 அடியை தொட்டு 40.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 420 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீரும், வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
Next Story






