என் மலர்
செய்திகள்

சிவகிரி அருகே புதுமாப்பிள்ளை விஷ மாத்திரை தின்று தற்கொலை
சிவகிரி:
சிவகிரியை அடுத்த மலையம்பாளையம், வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35).
இவருக்கும் நத்தக்காடையூரை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திரமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருதே கண்வன்–மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கவுசல்யா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று பெரியசாமி கவுசல்யா வீட்டிற்கு சென்று சமதானம் பேசி மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.
ஆனால் கவுசல்யா பெரியசாமியுடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து சிவகிரியை அடுத்த ஆயப்பரப்பு பகுதியில் உள்ள கனக்காங்காடு பகுதியில் விஷ மாத்திரை தின்று தனது தங்கைக்கு தகவல் கொடுத்தார்.
அவரது தங்கை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மயங்கி கிடந்த பெரியசாமியை மீட்டு கரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






