என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த வாய்க்கால் மேடு ரகுபதி நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் பங்குதாரராக உள்ளார்.
இவரது மனைவி சரண்யா (வயது23). இவருக்கு வயிற்று வலி இருந்தாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாக வில்லையாம்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியாக சரண்யா இருந்தாராம். இதை நினைத்த கவலை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார் சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






