என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
    X

    காரைக்குடி அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

    காரைக்குடி அருகே நடந்த விபத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள சுன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 32) திருமணமாகி 1 வருடம் ஆகிறது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    ஒருமாத விடுமுறையில் கடந்த 9–ந் தேதி ஊருக்கு வந்த அழகப்பன், நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    ராமேசுவம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தம்பட்டி, புதுக்குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அழகப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அழகப்பனின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில், குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×