என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து பலி: தாய் போலீசில் புகார்
    X

    ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து பலி: தாய் போலீசில் புகார்

    ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இதுகுறித்து அவருடை தாய் சித்தோடு போலீசில் புகார் செய்துள்ளார்.
    ஈரோடு:

    ஈராடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள சி.எம். நகரை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (வயது 26).

    இவர்கள் கடந்த 6 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவ சுப்பிரமணியம் (5) என்ற மகனும், காவ்யா, கவியரசு என்ற 2 வயதான இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

    அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களிடையே இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த மணிமேகலை தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் மணிமேகலை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி மணிமேகலையின் தாயார் பழனியம்மாள் (46) சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    அதில் தனது மகள் மணிமேகலையை அவரது கணவர் சுரேஷ் பணம் கேட்டு அடித்து தொந்தரவு செய்ததால் மணிமேகலை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×