என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை அருகே விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை:
சிதம்பரம் அருகே சூடியபிள்ளை தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 54). இவர் தமிழ்நாடு மின்சார துறையில் களப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தில்லைகரசி, ஒரு மகள் உள்ளார்.
இவருடைய சகோதரி திருச்சியில் வசித்து வருகிறார். இன்று காலை இவர் திருச்சியிலிருந்து திருவாரூருக்கு ரெயிலில் வந்தார். இவரை பார்ப்பதற்காக குழந்தைவேல் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இன்று காலை 6 மணியளவில் அவர் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை என்ற பகுதியில் வந்த போது குறுக்கே வந்த நாயால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
சிதம்பரம் அருகே சூடியபிள்ளை தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 54). இவர் தமிழ்நாடு மின்சார துறையில் களப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தில்லைகரசி, ஒரு மகள் உள்ளார்.
இவருடைய சகோதரி திருச்சியில் வசித்து வருகிறார். இன்று காலை இவர் திருச்சியிலிருந்து திருவாரூருக்கு ரெயிலில் வந்தார். இவரை பார்ப்பதற்காக குழந்தைவேல் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இன்று காலை 6 மணியளவில் அவர் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை என்ற பகுதியில் வந்த போது குறுக்கே வந்த நாயால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
Next Story






