என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் காயம்
ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது26).
ரமேஷ் சம்பவத்தன்று தனது நண்பர் பூபதியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார். ஈரோடு வடக்கு நுழைவு வாயிலில் ரோட்டை கடந்த போது எதிர் திசையில் வந்த அரசு பஸ் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது மோதியது.
இதில் ரமேஷுக்கும், பூபதிக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது26).
ரமேஷ் சம்பவத்தன்று தனது நண்பர் பூபதியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார். ஈரோடு வடக்கு நுழைவு வாயிலில் ரோட்டை கடந்த போது எதிர் திசையில் வந்த அரசு பஸ் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது மோதியது.
இதில் ரமேஷுக்கும், பூபதிக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






