என் மலர்
செய்திகள்

வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு: என்.எல்.சி. தொழிலாளர்களுடன் சென்னையில் இன்று பேச்சுவார்த்தை
என்.எல்.சி. தொழிலாளர்களுடன் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சுரங்கத் துறை சட்டப்படி அகவிலைப்படி உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 3 முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (11-ம் தேதி) இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில் அந்த சங்கத்தின் சிறப்பு செயலர் எம்.சேகர் கூறும்போது:-
திட்டமிட்டப்படி சனிக்கிழமை இரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்தப் போராட்டத்தை நிறுத்தும் முயற்சியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதில் எட்டப்படும் முடிவைப் பொருத்தே வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் அண்ணாதுரை முன்னிலையில் சென்னை சாஸ்திரி பவனில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
என்.எல்.சி. சார்பில் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று தொடங்காது. இல்லாவிட்டால் இன்று இரவு முதல் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சுரங்கத் துறை சட்டப்படி அகவிலைப்படி உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 3 முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (11-ம் தேதி) இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில் அந்த சங்கத்தின் சிறப்பு செயலர் எம்.சேகர் கூறும்போது:-
திட்டமிட்டப்படி சனிக்கிழமை இரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்தப் போராட்டத்தை நிறுத்தும் முயற்சியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதில் எட்டப்படும் முடிவைப் பொருத்தே வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் அண்ணாதுரை முன்னிலையில் சென்னை சாஸ்திரி பவனில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
என்.எல்.சி. சார்பில் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று தொடங்காது. இல்லாவிட்டால் இன்று இரவு முதல் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
Next Story






