என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் பூக்கள் உற்பத்தி அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பூக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மல்லிகை பூக்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளது. புதுக்கோட்டை ஆலங்குடி, வடநாடு, மாஞ்சான் விடுதி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூக்கள் பயிர் செய்துள்ளனர். மழையால் பூக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு மருந்து தெளிப்பான் மற்றும் பூச்சி மருந்து வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகை பூவுக்கு ரூ.300 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மல்லிகை பூக்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளது. புதுக்கோட்டை ஆலங்குடி, வடநாடு, மாஞ்சான் விடுதி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூக்கள் பயிர் செய்துள்ளனர். மழையால் பூக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு மருந்து தெளிப்பான் மற்றும் பூச்சி மருந்து வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகை பூவுக்கு ரூ.300 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story






