என் மலர்
செய்திகள்

நங்கநல்லூரில் தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.
தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.
இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது
சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.
இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.
தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
Next Story






