என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
    X

    உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், பா.ம.க. தனித்து தான் போட்டியிடும். நான் டெல்லியில் தேர்தல் ஆணைய தலைவரை சந்தித்து 6 மணி நேரம் பேசினேன்.

    தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவருடைய கட்சி சின்னத்தை முடக்க வேண்டும்.

    இதுகுறித்து பாராளு மன்றத்தில் பேசுவேன். பாராளுமன்ற நிலை குழு சென்னை வரவிருக்கிறது. அவர்களையும் சந்தித்து இது குறித்து மனு கொடுப்பேன்.

    திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து உண்மை வெளிவர வேண்டும். இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×