என் மலர்
செய்திகள்

லாரி மோதி ஓட்டல் ஊழியர் பலி
காஞ்சிபுரம் அருகே லாரி மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வடிவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (47). இவர் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் காஞ்சிபுரம் வந்த அவர் தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு செவிலிமேடு பாலாற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பச்சையப்பன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story






