என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்து - கார் பயங்கர மோதல்: 5 பேர் பலி
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் இன்று நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை:
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா வந்தனர். அங்கிருந்து கார் மூலம் இன்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை பகுதியில் சென்றபோது கார் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. காருக்குள் இருந்த குழந்தை, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா வந்தனர். அங்கிருந்து கார் மூலம் இன்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை பகுதியில் சென்றபோது கார் மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. காருக்குள் இருந்த குழந்தை, 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி துடிதுடித்து இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






