என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் மரங்கள் நடும் பணி: கலெக்டர் ஆய்வு
அரியலூர்:
அரியலூர் வனக்கோட்டம் மத்திய நாற்றங்காலில் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் 2016–17–ம் ஆண்டு உற்பத்தி செய்த 1,11,880 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உற்பத்தி செய்யப்பட்ட 50,000 புங்கன், 15,000 தேக்கு, 10,000 புளியங்கன்று, 8,700தூங்குவாகை, 6,000 வேம்பு, 3,000 ஆவி,2,000 நாவல், 1000 ஈட்டி, 1000 நெல்லி, 1,600 நீர்மருது, 4650 மந்தாரை, 1000 டெலானக்ஸ், 760 சிகப்பு சந்தனம், 670 தான்றி, 500 பாதாம் என 1,11,880 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் விவரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.
மேலும் கூடுதலாக இரண்டு நாற்றங்களை உருவாக்கிட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அரியலூர் சமூக காடுகள் சரகத்தின் மூலம் 1,990 முதல் நாற்றங்கால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு மரங்களை பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
இந்த மரக்கன்றுகள் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட பணியாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மாவட்ட வன அலுவலர் சந்திரன், வனச்சரக அலுவலர் கணேசன், வட்டாட்சியர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






