என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி 6-ந் தேதி முதல் நடக்கிறது
ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 06.06.2016 முதல் 30.06.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்டத்தில் நடக்கிறது.
அரியலூர்:
ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற ஏதுவாக 06.06.2016 முதல் 30.06.2016 வரை ஆதார் புகைப்படம் எடுக்கும் முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆண்டிமடம் ஃ தா.பழூர் ஜெயங்கொண்டம் திருமானூர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.
மேலும், ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் அதிகாலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்பதால் ஆதார் எண் பெறாத பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை புரிந்து ஆதார் புகைப்படம் எடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






