என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது
    X

    நாகையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

    நாகையில் கத்தியை காட்டி மிரட்டி பூ வியாபாரியிடம் ரூ. 1100 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நாணயக்கார தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) பூ வியாபாரி. இவர் புத்தூர் அண்ணாசிலை அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது நாகை, அக்கரை குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் (36) அங்கு வந்தார். அவர் கத்தியை காட்டி ரமேசை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1100–ஐ பறித்து சென்றுவிட்டார்.

    இதுபற்றி ரமேஷ் நாகை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த முனீஸ்வரனை கைது செய்தனர்.

    Next Story
    ×