என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா, (வயது 55). விவசாயி.இந்நிலையில் இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கடந்த 29–ந் தேதி ஆவணத்தான்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்துள்ளார்.

    அப்போது எதிரே அடையாளம் தெரியாத நபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கருப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பையாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் திடிரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×