என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூர் அருகே கார் மீது பஸ் மோதல்: 2 பேர் பலி
    X

    மேல்மருவத்தூர் அருகே கார் மீது பஸ் மோதல்: 2 பேர் பலி

    மேல்மருவத்தூர் அருகே கார் மீது பஸ் மோதலில் 2 பேர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரப் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிக்அலி (வயது 45) துபாயில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    மீண்டும் துபாய்க்கு செல்வதற்காக நேற்று வீட்டில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து கொண்டிருந்தார்.

    காரை அவரது உறவினர் முகமது அஸ்ரப்அலி ஓட்டினார். காரில் உறவினர்கள் சுல்தான் ஆரிப், ஜாகீர்உசேன் ஆகியோர் இருந்தனர்.

    இரவு 7 மணியளவில் மேல் மருவத்தூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து அரசு பஸ் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று தறிகெட்டு ஓடியது. சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்று எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிய முகமது அஸ்ரப் அலி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிக்அலி இறந்தார். சுல்தான் ஆரிப், காசீர்உசேன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×