என் மலர்
செய்திகள்

சிவகங்கை பகுதியில் 6,7–ந் தேதிகளில் குடிநீர் நிறுத்தம்: கலெக்டர் அறிவிப்பு
சிவகங்கை:
சிவகங்கை பகுதியில் குழாய்கள் சீரமைக்கபடுவதால் 6,7–ந் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சிவகங்கை நகராட்சி, மதுரை– தொண்டி தேசிய நெடுஞ்சாலை, புதிய மேம்பாலம் மற்றும் சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்தின் கீழ் (காவேரி ஆற்று நீர்) சுரங்க சாலையின் நடுவே பதிக்கப்பட்டுள்ள 350 மி.மீ சிமெண்ட் குழாய்களை மாற்றி சாலை ஓரமாக மாற்று இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகள், புதிய குழாய்களை பழைய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் வரும் 6, 7–ந் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






