என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் கேபிள் வயரை சேதப்படுத்திய ஆபரேட்டர்கள் கைது
காரைக்குடியில் கேபிள் ஆப்டிக்கல் வயரை சேதப்படுத்தி ஒளி பரப்பை தடுத்த 2 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி:
காரைக்குடி அழகப் பாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41), செக்காலையை சேர்ந்தவர் முத்துக்குமார் (41). ஏரியா கேபிள் டி.வி. ஆபரேட்டர் களான இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கேபிள் கட்டணத்தை செலுத்த வில்லை என கூறப்படு கிறது.
இதையடுத்து அரசு கேபிள் ஆபரேட்டர் பழனிச் சாமி (33), 2 பேர்களின் ஏரியாவில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை நிறுத்தி வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, முத்துக்குமார் ஆகிய 2 பேர் காரைகுடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கேபிள் ஆப்டிக்கல் பைபர் லயன் வயரை தேசப்படுத்தினர். இதனால் காரைக்குடி நகர் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடைப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக் குப்பதிவு செய்து தமிழ்மணி, முத்துக்குமாரை கைது செய்தனர்.
Next Story






