என் மலர்
செய்திகள்

கூடுவாஞ்சேரியில் கணவன் -மனைவியை தாக்கி நகை கொள்ளை
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 9 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் கலாவதி. நேற்று இரவு அவர் கணவருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு நடத்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தனர்.
நகை - பணம் கேட்டு தம்பதியை மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கலாவதி அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் கலாவதி. நேற்று இரவு அவர் கணவருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு நடத்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தனர்.
நகை - பணம் கேட்டு தம்பதியை மிரட்டினர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் கலாவதி அணிந்து இருந்த 9 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






