என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
    X

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

    ஜெயங்கொண்டம் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. அவரது மனைவி பவுலாஜெசின் (வயது 59).

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (65) குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சிணை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

    இந்த நிலையில் கடந்த 28–ம் தேதி அந்தோணிசாமி அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன்கள் கிருஷ்ணவதேவராஜ் (40), வின்செண்ட்பவுல் (36), ஜெனிட்டாமேரி (34).ஆகியோருடன் சென்று வீட்டில் தனியாக இருந்த பவுலாஜெசினியிடம் தகராறு செய்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பவுலாஜெசின் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து அந்தோணிசாமி, வின்செண்ட்பவுல், ஜெனிட்டாமேரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×