என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்ச்சி திட்டம்: காஞ்சீபுரம் கலெக்டருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
    X

    வளர்ச்சி திட்டம்: காஞ்சீபுரம் கலெக்டருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமியிடம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 9 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

    இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், சுந்தர், எழிலரசன், புகழேந்தி, அரசு, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கஜலட்சுமியை சந்தித்து மக்கள் பிரச்சனையை கையாள்வது குறித்தும், தொகுதி மேம்பாட்டு நிதியினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதிவாரியாக மூன்று அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

    Next Story
    ×