என் மலர்
செய்திகள்

மடிப்பாக்கத்தில் விமான நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், சதாசிவம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரகுநாதன். அண்ணா சாலையில் உள்ள தனியார் ஏர் லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர். ரகுநாதன் மட்டும் வீட்டில் இருந்தார்.
நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது ஜன்னல் உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
ரகுநாதன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






