என் மலர்tooltip icon

    செய்திகள்

    45 நாட்கள் தடைக்காலம் முடிந்தது: புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்
    X

    45 நாட்கள் தடைக்காலம் முடிந்தது: புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

    மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்துபுதுக் கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    அறந்தாங்கி:

    தமிழகத்தில் உள்ள கடற் பகுதிகளில் மீன்கள்இனப் பெருக்கத்திற்காகஆண்டு தோறும் ஏப்ரல்15-ந்தேதி முதல் மே30-ந் தேதி வரை கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த பலஆண்டுகளாக நடை முறையில் உள்ள இந்த தடைக் காலம் இந்த ஆண்டும் நடை முறைப்படுத்தப்பட்டது.

    அதன்படி கடந்த 45 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறை வடைந்ததை அடுத்து இன்று காலை மீனவர்கள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து 285 விசைப்படகு கள், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 230 விசைப்படகு களில்சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    45 நாள் தடைக்காலம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சார்ந்த உப தொழிலான ஐஸ் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றதையடுத்து ஐஸ் உற்பத்தி தொடங்கி உள்ளது.

    மேலும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீன்பிடித்தளம் களை கட்ட தொடங்கியுள்ளது.
    Next Story
    ×