என் மலர்
செய்திகள்

கடலூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் எம்.சி.சம்பத்
கடலூர்:
கடலூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.சி.சம்பத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கடலூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் காரமணிக்குப்பம், வர்க்கால்ப்பட்டு உள்ளிட்ட பல பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் டி.ஜி.என்.ராமலிங்கம், மதியழகன், தொகுதி கழக துணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், நில வங்கி துணை தலைவர் ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயராயலு, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராஜசேகர், ராதிகா ஜெயபால், வசந்தா முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், நடராஜன், சுதாகர் கிளை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






