என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே கோஷ்டி மோதலில் 3 பேர் படுகாயம்: 5 பேர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன்கள் வீரகுமார் (வயது 25) மணிகண்டன் (22). இவர்கள் இருவரும் நாலுவேதபதியில் உள்ள அவர்கள் தங்கை வனிதா வீட்டிற்கு சென்று வெள்ளை அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கோவில்பத்து திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ஜெயகுமார் (26) திலகரசன் (23) பிரபாகரன் (26) ரஞ்சித் (22) மகேஷ் (22) உள்பட சிலர் சேர்ந்து வீரகுமார், மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்களாம்.
இதைத் தொடர்ந்து வீரகுமார், மணிகண்டன், அவர்களது தங்கை வனிதா ஆகிய 3 பேரையும் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிஉள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட வீரகுமார், மணிகண்டன், வனிதா ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கண்ட ஜெயகுமார், திலகரசன், பிரபாகரன், ரஞ்சித், மகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சிலரை தேடி வருகிறார்கள்.






