என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே போலீஸ் லாரி மோதி முதியவர் காயம்
வேதாரண்யம் அருகே போலீஸ் லாரி மோதி சாலையில் நடந்து சென்ற முதியவர் காயம் அடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை செய்து விட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு சாலை தடுப்பு இரும்பு தட்டிகள் ஏற்றி சென்ற போலீஸ் லாரி எதிர்பாராமல் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை செய்து விட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு சாலை தடுப்பு இரும்பு தட்டிகள் ஏற்றி சென்ற போலீஸ் லாரி எதிர்பாராமல் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






