என் மலர்
செய்திகள்

காரைக்குடி கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடியை அடுத்து உள்ள இலுப்பக்குடி கலை மணி நகரைச் சேர்ந்தவர் ஷீலா சில்வியா (வயது25). இவருக்கும், தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த பிரவீன் (32) என்பவருக்கும் கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஷீலா சில்வியா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பிரவீன் சித்ரவதை செய்து வருகிறார். இதற்கு உடந்தையாக மாமியார் ஜேம்ஸ்மேரி (52), நாத்தனார் தேன்மொழி (27), அவரது கணவர் ஆண்டனி ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
புகாரின்பேரில் காரைக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதுராஜூ விசாரணை நடத்தி பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Next Story






